Breaking News

Thiruvidanthai Nithya Kalyana Perumal Temple

 திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில் : 

சென்னை - மாமல்லபுரம் சாலையில் கோவளத்திற்கு அடுத்ததாக உள்ளது  



 திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் தலத்தின் சிறப்பு :

திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில் :  திருமணம் தள்ளி போகும் ஆண்/பெண் இங்கு வந்து தரிசனம் செய்து சென்றால் விரைவில் திருமண யோகம் அமையும் என்பது ஐதீகம் .

திருமணம் ஆகாதவர்கள் செய்ய வேண்டிய பரிகாரகங்கள் :

திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில் நுழைவு வாயிலை கடந்து உள்ளே சென்றந்தும் , இந்த குளத்தில் திருமண வரன் அமைய வேண்டி கை, கால்களை நனைத்து அருகில் உள்ள பகுதியில் மஞ்சள் கயிறு வாங்கி கட்டி கொள்ள வேண்டும் , அங்கு குளத்திலுள்ள மீன்களுக்கு பொறி உணவு அளித்திட வேண்டும் . 



(குளம் அருகில் உள்ள கடைகளில் பூ மாலை , பொறி  மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்கிறார்கள் ( விலை  270 ரூபாய் 21 -02 -2022  அன்று  )

அதன் பின் நித்திய கல்யாண பெருமாளை தரிசிக்க வரிசையில் காத்து இருக்க வேண்டும் - (நான் 21 -02 -2022  அன்று காலை  9  மணிக்கு வரிசையில் நின்று - 10  மணிக்கு தரிசனம் கிடைத்தது -) , திருமண வரன் வேண்டி செல்பவர்கள் உள்ளே உங்கள் பெயரில் அர்ச்சனை செய்ய 50  ரூபாய் கட்டணம் . உள்ளே சென்றதும் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கழுத்தில் மாலை அணிவிப்பார்கள் , அந்த மாலையை வீட்டிற்கு கொண்டு சென்று, திருமணம் முடிந்தவுடன் தம்பதியர்களாக வந்து இங்கு கோவில் பின்புறம் உள்ள மரத்தடியில் வைக்க வேண்டும் .



திருமணம் ஆகாதவர்கள் குழந்தை பேறு பெற - நித்திய கல்யாண பெருமாளை தரிசித்து - இருவரும் மாலை மாற்றிக் கொண்டு , பிரகாரத்தை ஒரு முறை சுற்றி வந்து, அந்த மாலையை வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும் .






No comments