Sri Bhavani Amman Kovil Periyapalayam Tiruvallore
பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் கோவில் திருவள்ளூர் மாவட்டம் :
சென்னை மீஞ்சூரில் இருந்து (29km) - திருப்பதி செல்லும் சாலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் கோவில். ஞாயிறு அன்று காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், மற்ற நாட்களில் காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை & 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது .
இலவச தரிசனம் , ரூபாய் கட்டண தரிசனம் இரண்டும் அருகருகே உள்ளன மற்றும் சிறப்பு ரூபாய் கட்டண தரிசனம் கோவில் வளாக முன்பு உள்ளது . கோவில் உள்ளே தற்போதைக்கு பூ மாலை அம்மனுக்கு செலுத்த , தேங்காய் உடைத்தல் அனுமதி இல்லை , பவானி அம்மனை தரிசித்து வெளியே வந்து சக்தி மண்டபம் அருகே தேங்காய் உடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இங்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறவும் / நிறைவேறிய வேண்டுதலுக்கு நன்றி செலுத்தவும் வேப்பிலை உடை அணிந்து கோவிலை வலம் வருதல் , கோழி , ஆடு கோயிலுக்கு கொடுத்தல் , முடி காணிக்கை செலுத்துதல் , அங்க பிரதட்சிணம் செய்தல் , தேங்காய் உடைத்து நெய் விளக்கு ஏற்றி மற்றும் பொங்கல் வைத்து வழிபடுதல் என கோவிலே பக்தி மயமாக திகழ்கிறது .
No comments