Breaking News

நகரத்து விடியல்

சலசலப்பின்றி
நிற்கும் மரங்களாய்
கட்டிடங்கள் !
அதன் மீதேறி
சிறு பாத்திரத்தில் ஊற்றிய நீரை பகிர
கா கா என கரையும் காக்கைகள்..!

முன்னிரவு மிச்சமென ஒதுக்கப்பட்ட சிதறிய உணவை
முன்னெடுக்க குனுகும் புறாக்கள்.. !

வீசியெறிந்த பழங்களை கொரிக்க
அங்குமிங்குமாக அலைபாயும்
அணில்கள் !

விடியலை வுணர்த்த
கூவும் கோழிகள் அன்றி
குழம்புகளில் கொதிக்க
கூண்டுகளில் கொக்கரிக்கும்
பிராய்லர் சிக்கன்கள் !

தொலைக்கப்பட்ட
குருவிகள், மைனாக்கள்
இதர சிறு பட்சிகளின்
வீழ்ச்சிக்கு சாட்சியாக நிற்கும்
தொலைதொடர்பு சாதனங்கள்
நாகரிக மனிதர்கள் மத்தியில்
செங்கதிர்களின் வரவை நோக்கி
"நகரத்து விடியல் "!.

செல்ல திரு ✍️

No comments